Monday, October 7, 2013

ஆந்திராவில் விரைவில் புயல் தாக்கும்: வானிலை இலாகா எச்சரிக்கை


கடந்த ஆண்டு ‘நீலம்’ புயல் மகாலிபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் தமிழ்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டது.
ஆந்திராவில் விரைவில் புயல் தாக்கும்: வானிலை இலாகா எச்சரிக்கை
தற்போது அந்தமான்– நிக்கோபர் தீவு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது. இது புயலாக உருவாக வாய்ப்பு உள்ளது.
இந்த புதிய புயல், கடந்த ஆண்டு உருவான நீலம் புயலை விட வலிமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
புதிய புயல் மேற்கு வடமேற்காக நகர்ந்து ஆந்திராவில் கரை கடக்க வாய்ப்புள்ளது. இன்னும் சில தினங்களில் புயல் ஆந்திராவை தாக்கலாம்.
அடுத்த 24 மணி நேரத்தில் இந்த புயல் சின்னம் தீவிரம் அடையும். அடுத்த 2 அல்லது 3 நாட்களில் ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்யும். அதை தொடர்ந்து புயல் தாக்கலாம் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment