Wednesday, October 9, 2013

தூத்துக்குடி அருகே தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் வெட்டிக் கொலை

தூத்துக்குடி அருகே தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் வெட்டிக் கொலைதூத்துக்குடி மாவட்டம் வளநாடு அருகே தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியின் முதல்வராக சுரேஷ் என்பவர் உள்ளார். இவர் இன்று கல்லூரி வளாகத்தில் மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டினர். 

இதையடுத்து, அவரை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

விசாரணையில், அந்த கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலரே அவரை வெட்டிக் கொன்றதாக கூறப்படுகிறது. இதனால், மாணவர்கள் சிலரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment